சென்னை, ஜூன் 29 - என்எம்ஆர் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்தார். மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் செவ்வாயன்று (ஜூன் 28) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேள்வி நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 41 வட்ட உறுப்பினர் ப.விமலா, 2011ம் ஆண்டு எல்லை விரிவாக்கம் செய்தபோது, 525 என்எம்ஆர் தொழிலாளர்கள் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களாக இணைக்கப்பட்டனர். இந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த மேயர், இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் கோரிக்கை எழுப்பி உள்ளன. அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகராட்சி குழுத் தலைவர் ஆர்.ஜெயராமன் (4வது வட்டம்), கொசத்தலை ஆறு மழைநீர் வடிகால்வாய் திட்ட பணிகள் அனைத்து தெருக்களிலும் துண்டு துண்டாக செய்யப்படுகிறது. மின் கம்பங்கள், பில்லர்கள் உள்ள இடங்களிலும் கால்வாய் இணைக்கப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாய்களில் தேங்கி நிற்கிறது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேட்டதோடு கடந்தா ண்டு ஆகஸ்ட் மாதம் பணி முடிக்கப்பட்ட முருகப்பா நகர், ஜோதிநகர் சண்முகபுரத் தில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா ? என்று கேட்டார். மின் கம்பங்கள் இருக்கும் இடங்களில் உள்ள கால்வாய்கள் முறையாக இணைக்கப் படும். தெருக்களிடையே கால்வாய்களை இணைப்பதற்கு முன்னுரிமை அளித்து மழைக்கு முன்பாக பணிகள் முடிக்கப்படும். தெருவிளக்குகளை ஒப்பந்ததாரர்கள்தான் அமைக்க வேண்டும். இருப்பினும், தெருவிற்கு இரண்டு தெருவிளக்காவது உடனடியாக அமைக்கப்படும் என்று மேயர் தெரிவித்தார்.