districts

திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் மர்மமரணம்

திருவண்ணாமலை, ஏப்.8- திருவண்ணாமலை அருகே திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தார். அவர் கணவருடன் ஓட்டுப்போட சென்றபோது மயங்கி விழுந்ததாக கூறப்படுவதால் கோட்டாட்சி யர் விசாரணை நடந்து வருகிறது. திருவண்ணாமலை தாலுகா காட்டாம்பூண்டி மடுவங்கரை கிரா மத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 49). இவரது மகள் மோனிஷா (21). இவருக்கும், அய்யம்பாளையத்தை சேர்ந்த சாமிதுரை என்பவ ருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் செவ்வாயன்று  மோனிஷா ஓட்டு போடுவதற்காக கணவருடன் சென்றபோது மயங்கி விழுந்துவிட்டதாகவும், மருத்துவ மனையில் இருப்பதாகவும் ஏழுமலைக்கு தகவல் கிடைத்தது. அதன்பே ரில் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்  ளார். அப்போது மோனிஷா தூக்குப்போட்டு இறந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஏழுமலை தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக திரு வண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மோனிஷாவுக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் இந்த சம்பவம் குறித்து திருவண்ணா மலை வருவாய் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

;