districts

img

கடலூரில் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

கடலூர், ஜன.1- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து ‘விடியாத இரவு ஒன்று எதுவுமில்லை’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தின. வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சின்னத்தம்பி தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆகாஷ் வரவேற்றார். மாதர் சங்க நகர செய லாளர் சாந்தகுமாரி, முற்போக்கு எழுத்தாளர் சங்க நகர செயலாளர் கேத்தரின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‘இடுக்கண் வருங்கால் வெகுக’ என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு பேர. ராஜா தலைமை தாங்கினார். இதில் சிவா அன்பன், ஓவியர் ரமேஷ், கவிஞர் குமணன், கவிஞர் பாரதி, தமிழ் முல்லை, கவிஞர் கலைவாணன் ஆகியோர் கவிதை வாசித்தனர். ‘சுயநலமும் போதை பழக்கம் கொண்ட இளைஞர் கள் குற்றவாளிகளே’என்ற தலைப்பில் கவிஞர் பால்கி தலைமையில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. இதில் வழக்கு தொடுத்து மருதவாணன், அமர்நாத், குமரவேல் பேசினர். வழக்கை மறுத்து எஸ். வாலண்டினா, சௌமியா,  ரவி ஆகியோர் உரையாற்றினர். ‘இந்தியாவை பாதுகாப்போம்’என்ற தலைப்பில் மனிதம் அமைப்பின் மாநில அமைப்பாளர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு உரை யாற்றினார். வாலிபர் சங்க நகர செயலாளர் ஆனந்தராஜ் நன்றி கூறினார். முன்னதாக தேஜாஸ்ரீ,சஹானா குழந்தை களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.