districts

கொலை வழக்கு: இளைஞர் தடுப்புக்காவலில் கைது

கடலூர், ஜூன் 11- கடலூர் சுப்பராயலு நகரைச் சேர்ந்தவர் வீரா (எ) வீராங்கன்  (35). ரவுடியான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை தேடி வந்த காவல் துறையினர் கிருஷ்ணன் என்பவரை என்கவுன்டர் செய்தனர். மேலும், 18 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை ஏற்கனவே குண்டர்  தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய வண்டிப் பாளையம் முத்தையா நகரைச் சேர்ந்த ராஜசேகர் (23)  என்பவரையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது  செய்தனர். இவரின் குற்ற நடவடிக்கையை கட்டுப்படுத்திடும் வகையில் காவல் துறையினர் இந்நடவடிக்கையை மேற் கொண்டுள்ளதாக தெரிவித்தனர். இவர் ஏற்கனவே கடலூர் மத்திய சிறையில் இருக்கும் நிலை யில் அவரை ஓராண்டிற்கு சிறையில் வைத்திருக்கும் வகை யில் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தற்கான ஆணையை மத்திய சிறைத்துறை அலுவலர்களிடம் காவல்துறையினர் வழங்கியுள்ளனர்.

;