புதுச்சேரி, ஜூலை 1- வயிற்றுப்போக்கு காரணமாக குழந்தை கள் உயிரிழப்பதை முற்றிலும் தடுக்கும் வகையில் குழந்தைகளிடையே வயிற்றுப் போக்கை நிறுத்துவதற்கான தேசிய இயக்கத்தின் துவக்க விழா புதுச்சேரி, கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் திங்களன்று (ஜூலை1) நடை பெற்றது. புதுச்சேரி அரசின் நலவழி மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான தேசிய இயக்கத்தை தொடங்கி வைத்து, வயிற்றுப் போக்கு காலத்தில், உடலில் நீர்ச்சத்து குறை பாட்டைப் போக்குவதற்கான ஓஆர்எஸ் கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரை களை குழந்தைகளுக்கு வழங்கினார். இதனைத்தொடர்ந்து, இந்த இயக்கத் திற்கான விழிப்புணர்வு சுவரொட்டிகளை வெளியிட்டு கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், அரசுச் செயலர் எம். ராஜூ, சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் ஸ்ரீராமுலு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர் கள், செவிலியர்கள் பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இரண்டு மாதங்களுக்கு செயல்படுத்தப் பட உள்ள இத்திட்டத்தின்கீழ் புதுச் சேரியில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் வீடுகளுக்கும் ஓ ஆர் எஸ் கரச்சல் பவுடர் பாக்கெட்டுகள் மற்றும் 14 துத்தநாக மாத்திரைகள் விநியோகிக்கப் பட உள்ளது.