சாம்சங் தொழிலாளர்களின் சங்கம் அமைக்கும் உரிமையை மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உளுந்தூர்பேட்டை சிபிஎம் நகர கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் பி.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், சிபிஐ மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், வாலிபர்சங்க மாநில இணை செயலாளர் செல்வராசு,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.கே.பூவராகவன், டி.ஏழுமலை, வி.சாமிநாதன்,மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.அய்யனார், டி.எஸ்.மோகன் ,பி.சேகர்,சின்னராசு,தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.