திருவண்ணாமலை, பிப்.15- திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி அருகே மலைவாழ் மக்கள் சங்கத்தின் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 33 ஆவது அமைப்பு தினத்தையொட்டி வெள்ளியன்று ( பிப்.14) வந்தவாசி வட்டம், பாதிரி கிராமத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ப.செல்வன் இனிப்பு வழங்கி வாழ்த்திப் பேசினார். வந்தவாசி வட்டார செயலாளர் அப்துல் காதர், மாவட்டக் குழு உறுப்பினர் சுகுணா, மலைவாழ் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் வடிவேல், வாலிபர் சங்க பொருளாளர் சுகுமார், கிளை செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.