கடலூர்,ஜூலை 13-
கடலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வின் சார்பில் கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செய லாளருமான பிரபாகர் தலை மையில் கேலிவதை (ராக்கிங்) தடுப்புச் சட்டம் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இவ்விழாவில் குற்றவி யல் நீதித்துறை நடுவர் எண் 3 ரகோத்தமன், காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு, மூத்த வழக்கறிஞர் ராம் சிங் ஆகியோர் கலந்து கொண்டு கேலிவதை தடுப்புச் சட்டம் குறித்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.
இவ்விழாவில் கல்லூரியின் செயலர் சுவாமி நாதன், ஜேம்ஸ் மேரி, நாட்டு நலப்பணித் திட்ட அலு வலர் முனைவர் அன்னம் மாள் மற்றும் பலர் உரை யாற்றினர்.