சென்னை, மார்ச் 15- உலக தரத்துடன் சூப்பர் ட்ரீ கோபுரம், கண்ணாடி மாளிகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் சென்னையில் ரூ.25 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பூங்கா பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடையும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் செம்மொழி பூங்கா எதிரில் வேளாண் தோட்டக்கலை சங்கம் என்ற பெயரில் கிருஷ்ணமூர்த்தி என்ற தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்திருந்த ரூ. 1000 கோடி மதிப்பிலான 6.09 ஏக்கர் நிலத்தை நீண்ட சட்டப் போராட்டத் திற்கு பிறகு தமிழ்நாடு அரசு மீட்டது. 2023 ஆம் ஆண்டு தோட்டக்கலைத் துறைக்கு சென்னை மாவட்ட நிர்வாகத்தால் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையில், சென்னை யில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் “கலைஞர் நூற்றாண்டு பூங்கா” ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ரூ. 25 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கு கடந்த மாதம் 29 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். உலக தரத்துடன் சூப்பர் ட்ரீ கோபுரம், கண்ணாடி மாளிகை,உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா விற்கான பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வெள்ளியன்று (மார்ச் 15) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச் சர் கண்ணாடி மாளிகை 40 மீட்டர் நீளம், 13 மீட்டர் அகலம், 12 மீட்டர் உயரம் கொண்டது. வண்ணம யமான மலர்கள், அழகிய தாவரங்கள் கொண்ட பசுமை குடில் அமைக்கப்படும் என்றார். சூப்பர் ட்ரீ டவர் இந்தியாவில் முதல் முறையாக இப்பூங்கா வில் சூப்பர் ட்ரீ டவர் (மரம் போன்ற கட்டிடம்) பத்து மாடிகளுடன் 105 அடி உயரம் கொண்ட தாக அமைக்கப்படவுள்ளது. இந்த சூப்பர் ட்ரீ டவர் கோபுரம் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டதோடு, மின்தூக்கி வசதியுடனும் அமைக்கப்படவுள்ளது. இக்கோபுரத்தின் மேல் தளத்தில் 40 மீட்டர் சுற்றளவுடன் சுமார் 100 நபர்கள் நின்று பூங்காவையும், சென்னை மாநகரின் அமைப்பை யும் கண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்படு கிறது, அருங்காட்சியகம் பூங்கா வளாகத்தில் அதிநவீன தோட்டக் கலை அருங்காட்சியகம் அமைக்கப்பட வுள்ளது. அதில் அரிய வகை தாவரங்கள், மலர்கள், போன்றவை காட்சிப்படுத்தப்படும். பசுமை நடைபாதை இப்பூங்காவில், நடைபாதை, பார்வை யாளர்கள் அடர்ந்த பசுமையான புல்வெளிகள் மற்றும் அமைதியான நீர் நிலைகளுக்கு இடையே நடந்து செல்வதற்கான வசதி, போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கி றோம். கம்பிவட ஊர்தி 70 மீட்டர் நீளம் கொண்ட சிறிய வகை யில் கம்பிவட ஊர்தி அமைக்கப்பட உள்ளது. இந்த தனித்துவமான உள்ளமைவு, பார்வை யாளர்கள் கம்பிவட ஊர்தியில் தாவரங்க ளுக்கு அருகில் நெருக்கமாக பயணிக்கும் அனுபவத்தை அளிக்கும். பசுமை நிலப்பரப்பு, நீரூற்று வசதி, கழிப் பறை, சிற்றுண்டியகம், மழைநீர் சேகரிப்பு வசதி, அலங்கார மின்விளக்கு வசதி கள், பார்வையாளர்கள் அமர்வதற்கு இருக்கை உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படு கிறது. இப்பூங்காவின் கட்டுமானப் பணிகள் பிப்ரவரி 2025-க்குள் முடிக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.