வேலூர், ஆக.21-
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா திங்களன்று (ஆக.21) நடந்தது. இதில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியின் 13-வது திங்களன்று (ஆக.21) நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன்
மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், “அடுக்கம்பாறை மருத்துவ மனையில் பலத்த பாதுகாப்பு இருக்கும் நிலையில் அறிமுகம் இல்லாத நபர் எப்படி உள்ளே நுழைந்து குழந்தையை கடத்தி சென்றார் என்பது குறித்து குழு அமைத்து மருத்துவர்கள், பணியாளர்கள், உள்ளிட்டோர் மீது துறை ரீதியான நட வடிக்கை எடுக்கப்படும். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலபடுத்தப்படும்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அணைக்கட்டு தாலுகா பொய்கை அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புற நோயாளிகள் பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் கல்வெட்டை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து புறநோயாளிகள் பிரிவில் வைட்டல் பே தனிப்பிரிவு தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களையும் பொருத்தினார்.