districts

மெட்ரோ ரயில் பணி:அடையாறு ஆற்றின் கீழ் மண் ஆய்வு

சென்னை, ஜூலை 26-  சென்னை மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ தூரம்  கொண்ட மெட்ரோ ரயில் பாதையில் ரயில் நிலையம் அமைக்கும் பணிக ளும் தொடங்கி உள்ளன. இதற்காக கிரீன்வேஸ் சாலையில் உள்ள பூங்கா வில் சுரங்க ரயில் நிலையம் அமைப் பதற்கான பணிகள் நடைபெறுகிறது.  இந்த பணிகள் முடிவடைந்ததும் கிரீன் வேஸ் சாலையில் இருந்து அடை யாற்றை கடந்து அடையாறு நோக்கி சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில்  நிலையம் அருகில் கூவம் ஆற்றின் கீழே  சுரங்க ரயில் நிலையம் அமைத்தது போல, அடையாறு ஆற்றின் கீழே சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக மிதவை படகுக ளில் எத்திரங்களை பொருத்தி அடை யாறு ஆற்றின் நடுவே மண் ஆய்வு செய்யும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது. மண் ஆய்வுக்கான ஒத்திகை அடையாறு ஆற்றில் திங்களன்று தொடங்கியது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-  அடையாறு ஆற்றின் குறுக்கே  துளையிடும் இயந்திரம் எடுத்துச் சென்று ஆற்றுப் படுகையை துளை யிட்டு மாதிரிகள் சேகரிக்கப்படும். ஒவ்வொரு 25 மீட்டர் முதல் 50 மீட்டர்  தொலைவிலும், 12 மீட்டர் முதல் 18  மீட்டர் ஆழத்திலும் மண் பரிசோதனை செய்யப்படும். மண் மாதிரிகள் சேகரிப்பு மற்றும் ஆய்வு பணிகள் 3 அல்லது 4 மாதங்களில் முடிவடையும். கிரீன்வேஸ் சாலை மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அடையாறு சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையம் இடையே 29 மீட்டர் ஆழத்தில் ஆற்றின் கீழே 400 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கப்படும். அதற்கு முன்ன தாக மண் பரிசோதனையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது  இவ்வாறு அவர்கள் கூறினர்.