districts

img

அடையாறு ஆற்றின் கீழ் மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு

சென்னை, பிப்.13- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழ னன்று (பிப்.13) சென்னை மெட்ரோ ரயில் நிறு வனத்தின் இரண்டாம் கட்டப் பணியின் கீழ், கெல்லீஸ் முதல் தரமணி வரை யிலான சுரங்க வழித்தடப் பகுதியில் கிரீன்வேஸ் மெட்ரோ நிலையம் முதல் அடை யாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் வரையிலான பணியில், 300 மீட்டர் அடையாறு ஆற்றில் கீழ் செல்லும் சவாலான வழித்  தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தை கடந்து அடை யாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளிவரும் நிகழ்வை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக, சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2-இன் கட்டு மானப் பணிகள், 3 வழித்  தடங்களில், 118.9 கி.மீ நீளத்தில் 128 ரயில் நிலை யங்களுடன் ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் நடை பெற்று வருகிறது. இப்பணிக்காக 23 சுரங்கம் தோண்டும் இயந்தி ரங்கள் பயன்படுத்தப்பட்டு, கட்டம்-II-இல் மொத்தம் 42.6 கி.மீ நீளத்திலான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கின்றன. வழித்தடம் 3-இல் மட்டும் 26.7 கி.மீ நீளத்தில் மாத வரம் – கெல்லீஸ் மற்றும் கெல்லீஸ் –தரமணி ஆகிய இரண்டு பகுதிகளாக சுரங்கம் தோண்டும் பணி கள் நடைபெற்று வரு கின்றன. இதில் இரண்டா வது பகுதியான கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான சுரங்க வழித்தடப் பகுதியில் கிரீன்வேஸ் மெட்ரோ நிலையம் முதல் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை வருகிறது.