districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் மறைந்த தோழர் கே.தமிழ்ச்செல்வன் முதலாமாண்டு நினைவு தினம் ஞாயிறன்று (டிச.1) அனுசரிக்கப்பட்டது. வேளச்சேரி பகுதிக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அவரது படத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பகுதிக்குழு உறுப்பினர் தி.திருநாமம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி, பகுதிக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாரதிராணி, ராமமூர்த்தி, சண்முகம், கோபால் உள்ளிட்டோர் பேசினர்.