districts

img

மழை வெள்ளம் தேங்குவதை கணக்கிட பாலம், சுரங்க பாலங்களில் அளவீடுகள்

சென்னை, அக். 17 - மழை வெள்ளத்தை கணக்கிட அடி அளவீடுகளை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.  இதற்காக சுரங்க பாலங்கள், ஆற்று முகத்துவ வாரம் உள்ளிட்ட 44 இடங்களில் அடி அளவீடுகளை வரைந்துள்ளது. தமிழகத்தில் அடுத்த வாரம் முதல்  வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. ஒவ்வொரு பருவ மழை யின் போது தாழ்வான இடங்களில்  மழை நீர் தேங்கி மக்கள் பாதிக்கப் படுகின்றனர். பருவமழையின்போது வெள்ளத்தின் அளவை கணக்கிடு வதற்கு ஏற்கெனவே 21 சுரங்கப் பாதைகள், 21 கால்வாய்கள், கூவம்  மற்றும் அடையாறு ஆற்றில் கண்காணிப்பு கேமராக்கள், உணர் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, மேற்கண்ட பகுதி களில் வெள்ள நீர் தேக்கத்தை கண் காணிப்பு கேமரா வழியாக கண் காணிக்க முடியும். ஆனால், எவ்வளவு  உயரத்திற்கு  மழைநீர்  தேங்குகிறது. எவ்வளவு உயரத்திற்கு மேல் நின்றால் அபாயகரமானது போன்றவற்றை கண்காணிப்பு கேமரா காட்சி மூலமாக  அறிய முடியவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, மேற்கூறிய 42 இடங்களில், கண்காணிப்பு கேமராவில் தெரியும் படி, அடி அளவீடு வரையப் பட்டுள்ளது. குறிப்பாக, எழும்பூர் கெங்கு ரெட்டி  சுரங்கப் பாதையில் மஞ்சள் நிறத்தில் ஒரு அடி முதல் 7 அடி வரை உயரத்திற்கு அளவுகோல் சுரங்கப்பாதை யின் பக்கவாட்டு சுவரில் வரையப் பட்டுள்ளது. இதன் மூலம் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீர் அபாய அளவை எட்டும் போது, கண்காணிப்பு கேமராவில் பார்த்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கென உரு வாக்கப்பட்டுள்ள தொழிலாளர் செயலி (ஒர்க்போர்ஸ் ஆப்) வழியாக  எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப் படும். அதனைத் தொடர்ந்து மண்டல மற்றும் வார்டு பொறியாளர்கள், சுரங்கப் பாலங்களில் இருந்து வெள்ள  நீரை வெளியேற்றும் பணி, போக்கு வரத்துக்கு தடை விதிப்பது, ஆறுகள் மற்றும் கால்வாய் கரையோர மக்களை  வெள்ளம் அபாய கட்டத்தை எட்டும் போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும்.