மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திருவொற்றியூரில் பகுதி தலைவர் அலமேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.