சென்னை, செப். 11 - பெண்களுக்கு விரோதமாக செயல்படும், ஒன்றிய பாஜக அரசை அம்பலப்படுத்தி திங்களன்று (செப்.11) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பிரச்சாரத்தை தொடங்கினர். கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான கொடுமை கள் அதிகரித்துள்ளது. பாலியல் குற்ற வாளிகளை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. பெண்களை பாலியல் பலாத்காரம், வன்கொடுமை, கொலை செய்த குற்றவாளிகளை ஒன்றிய அரசு ஊக்குவித்து வருகிறது. விளையாட்டு வீராங்கனைகளை பாலி யல் துன்புறுத்தல் செய்த பிரிஜ்பூஷண் எம்.பி., மணிப்பூரில் பெண்களை நிர்வாணப் படுத்திய இனவெறியர்கள், பெண்களை அடிமைப்படுத்தும் சனாதன கருத்துக்களை பரப்பும் பாஜக உள்ளிட்டோரை ஒன்றிய பாஜக அரசு பாதுகாத்து, ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில், பெண்கள் விரோத ஒன்றிய மோடி அரசை அம்பலப்படுத்தி அக்.5 அன்று டெல்லியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாபெரும் பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணி யின் கோரிக்கைகளை விளக்கி மகாகவி பாரதியார் நினைவு நாளான திங்களன்று (செப்.11) அண்ணாசாலையில் உள்ள பெரி யார் சிலைக்கு மாலை அணிவித்து, மாதர் சங்கத்தினர் பிரச்சாரத்தை தொடங்கினர். மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஆ.சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தை மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.சரவணசெல்வி தொடங்கி வைத்தார். மாவட்டச் செய லாளர் வி.தனலட்சுமி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன்மணி, மாதர் சங்க நிர்வாகிகள் ஆ.நாகராணி, கவிதா கஜேந்திரன், தென்றல், எஸ்.பவானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் குழு செப்.11-14 தேதிகளில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, துறைமுகம், எழும்பூர், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறது. செப்.14 அன்று சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா பங்கேற்கும் நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.