districts

img

பொய் வழக்கு : உதவி ஆய்வாளரை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கடலூர், செப்.3- பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த கருவேப்பிலங்குறிச்சி உதவி ஆய்வாளர் சிவராமனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பாசிக்குளம் புதிய காலனி கிராமத்தில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த வர் பாஸ்கர். கடந்த மாதம் 8 ஆம் தேதி கருவேப்பிலங்குறிச்சி உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் அவருடன் வந்த காவலர்கள் போதை பொருள் தேடுதல் என்ற பெயரால் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து அடித்து சித்தரவதை செய்துள்ளனர்- பின்னர் கடலூர் அரசு மருத்துவ மனையில் அனுதித்துள்ளனர்.  ஆகஸ்ட் 20ஆம் தேதி உடல்நிலை சரியில்லை என்று  தகவல் தெரிவித்து அவரது மனைவி காந்திமதியை வரவழைத்தனர்.  மருத்துவமனையில் அவரது கணவரை அவர் பார்த்த போது இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.  எனவே  பாஸ்கரன் மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்க்க தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஜாதியைச் சொல்லி திட்டிய உதவி ஆய்வாளர் சிவராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை கைப்பற்றாமல் பாஸ்கரன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ள உதவி ஆய்வாளர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். பாஸ்கர் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.உயிரிழந்த பாஸ்கருக்கு  4 பெண் குழந்தைகள் உள்ளதால் அந்த குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். நான்கு பெண் குழந்தைகளை பாது காக்க பாஸ்கரன் மணைவி காந்தி மதிக்கு அரசு வேலை வழங்கவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரு வேப்பிலங்குறிச்சி கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திட்டக்குடி வட்டச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார் . மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன், விருத்தா சலம் வட்டச் செயலாளர் ஆர். கலைச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், ஜி.ஆர்.இரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சின்னத்தம்பி, வழக்கறிஞர் சங்க மாவட்ட செயலாளர்கள் குமரகுரு, மாதர் சங்க மாவட்ட துணை தலைவர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.