கிருஷ்ணகிரி, ஜன. 1 - ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் சந்தனபள்ளி, காட்டேரி ஊராட்சி செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி.சேகர் அளித்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சந்தனபள்ளி ஊராட்சி செயலாளர் மஞ்சுநாத் 25 ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணிபுரிந்து வருகிறார். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒரே வீட்டை பலரின் பெயர்களில் கணக்கு காட்டி அவரே முழு தொகையையும் எடுத்துள்ளார். இத்திட்டத்தில் வீடு கட்டிய பலருக்கு முழுத்தொகையும் வழங்காமல் பாதிக்குமேல் எடுத்துக் கொண்டுள்ளார். கழிப்பறைகள் கட்டும் திட்டத்திலும் முழு பணத்தையும் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் புகார்கள் உள்ளன.
இதுகுறித்து கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் எழுப்பப்பட்டு விசாரணை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் வட்டார வளர்ச்சி அலுவல ரும், அதிகாரிகளும் எந்த நடவடிக்கை யும் எடுக்காததால் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பிறகும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மஞ்சுநாத் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். ஊத்தங்கரை வட்டம் காட்டேரி ஊராட்சி செயலாளர் சரவணன் 100 நாள் வேலையில் வராதவர்களின் பெயரை பட்டியலில் சேர்த்தும், கூலியை மிகவும் குறைவாக கொடுத்தும், செய்யாத வேலைக்கு செய்த தாக கணக்கு எழுதியும் முறைகேடு செய்து வருகிறார். இதேபோன்று பல தில்லுமுல்லுகள் செய்தும் நூறு நாள் வேலைத்திட்டம் மற்றும் ஊராட்சி நிதியிலும், முறைகேடுகள் செய்துள்ளதாக புகார்கள் உள்ளது. இதுகுறித்து ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடமும், ஊராட்சி நிர்வாகத்திடமும் விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழிவாங்கும் நோக்கு டன் 100 நாள் வேலையில் பணி புரியும் வி.தொ.ச. மாவட்டப் பொருளாளர் செல்வராஜின் தந்தை காளியப்பனை (67), சரவணன் மற்றும் அவரது தாய், தந்தை மூவரும் கடுமையான வார்த்தைகளை பேசி, செருப்பால் அடித்து, உதைத்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும் விவசாயத் தொழிலாளர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 முறை புகார் அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஒன்றிய, மாநில, ஊராட்சி நிதி களில் முறைகேடுகள் செய்து வரும் காட்டேரி ஊராட்சி செயலாளர் சரவ ணன் மற்றும் சந்தனப்பள்ளி ஊராட்சி செயலாளர் மஞ்சுநாத் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், முதியவர் காளியப்பன் தாக்கப்பட்டது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத ஊத்தங்கரை காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இருதய ராஜ், சாம்ராஜ், நஞ்சுண்டன், கோவிந்த சாமி, பிரகாஷ், ஊத்தங்கரை வட்டச் செயலாளர் மகாலிங்கம், கெலமங்க லம் ஒன்றியச் செயலாளர் சீனிவாசன், கிருஷ்ணகிரி வட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் இருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.