districts

சோளிங்கர் அருகே கள்ளச்சாரயம் விற்ற ஒருவர் கைது

ராணிப்பேட்டை, ஜூன் 9- சோளிங்கர் அருகே கள்ளச்சாரயம் விற்ற ஒருவரை காவக் துறையினர் கைது  செய்து, அவரிடம் இருந்த 110 லிட்டர்‌ கள்ளச்சாரயத்தை பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக சோளிங்கர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ஜெய பிரகாஷ், உதவி ஆய்வாளர் அருண் ராஜ்குமார் மற்றும் காவல் துறையினர் அந்த பகுதிக்குச் சென்று சோதனை செய்த னர். அப்போது ஊருக்கு ஒதுக்குப்புறமாக பானையில் வைத்து கள்ளச்சாரம் விற்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கள்ளச் சாராயம்  விற்பனை செய்த சோளிங்கர் பஜார் தெரு வைச் சேர்ந்த தாமோதரன் (28) என்பவரை  காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் கள்ளச்சாரயத்தை பறிமுதல் செய்தனர்.

;