விழுப்புரம்,பிப்.26- இந்துசமய அறநிலைய துறையின் கீழ் செயல்படும் கோயிகளில் மூன்று வருடம் பணிபுரிந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் மண்டல பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. அழகிரி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செய லாளர் அ.முத்துசாமி, துணைத் தலைவர் எஸ். தனசேகர் ஆகியோர் கலந்து கொண்ட னர். இந்தக் கூட்டத்தில், கோயில்களில் பணி யாளர்களை பணி நிரந்தர செய்ய வேண்டும். அன்னதான பணியாளர்களை 110 விதியின் கீழ் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கோயில் பணியாளர்கள் செயல் அலுவலர் நிலை 4 பதவிக்கு 25 விழுக்காடு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளி யிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பொங்கல் கருணை கொடை ரூ. 3000 உயர்த்தி வழங்கியதோடு 110 விதி யின் கீழ் பணியாளர்களின் நிரந்தரம் செய்த தமிழ்நாடு முதல்வர், அமைச்சர், ஆணையருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மண்டலத் தலைவராக பேராதரன், செயலாளராக மகாதேவன், பொருளாளராக சிவப்பிர காஷ், அமைப்பாளராக இளஞ்செழியன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப் பட்டனர்.