தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வடசென்னை மாவட்ட அமைப்பின் சார்பில் திருவொற்றியூரில் மகாத்மா காந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து “மதவெறி மாய்ப்போம், மத நல்லிணக்கம் காப்போம்” உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் முகமது நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கார்த்திஷ் குமார், மாவட்ட நிர்வாகிகள் காதர் உசேன், செம்மல், அபேதன், ஆண்ட்ரூஸ் ஆசீர்வாதம், சமாதான அறக்கட்டளை இயக்குநர் சதக்கத்துல்லா, எஸ்.கதிர்வேல் (சிபிஎம்), உலக முதல்வன் (விசிக), கவிஞர் சோலையப்பன் (தமுஎகச) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.