districts

img

குலக் கல்வி முறைக்கு எதிராக முழங்கிய மகத்தான மனிதர் சிங்காரவேலர்

சென்னை, அக். 29- சமூக நீதியை நிலைநாட்ட குலக்கல்வியை எதிர்த்த சிங்கார வேலர் வழி நடப்போம் என்று தமுஎகச கலை இரவில் மதுக்கூர் ராம லிங்கம் பொதுமக்களுக்கு வேண்டு கோள் விடுத்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் வடசென்னை மாவட்டம், திருவொற்றியூர் எண்ணூர் பகுதிக்குழு சார்பில் கலை இரவு பெரியார் நகரில் (பூ ராமு நினைவரங்கம்) சனிக்கிழமை (அக். 28) நடைபெற்றது. தலைவர் சண்முகானந்தம் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் மதுக்கூர் ராம லிங்கம் கலந்துகொண்டு “கண் மூடி பழக்கம் எல்லாம் மண் மூடி போக” என்ற தலைப்பில் பேசுகையில், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் ஆதிவிதை சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். இவர் தன்னுடைய 40ஆவது வயதில் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று முடித்து, சட்டப் புத்தகத்துடன் உயர் நீதிமன்றம் சென்ற போது, ஏற்கெனவே அங்கி ருந்த உயர் வகுப்பைச் சேர்ந்த வழக்க றிஞர்கள், “ஓய் சிங்காரவேலு, நீயெல்லாம்  வலையை தூக்கிகிட்டு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டிய ஆள். நீ புத்தகத்தை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு வந்துட்ட, லோகம் இனி நல்லா இருக்குமா எனத் தெரியவில்லை” என்று கூறினார்களாம். சிங்காரவேலர் பதில் ஏதும் கூறாமல் சென்று விட்டார். அடுத்த நாள் மீன் பிடிக்கும் வலை யில் சட்ட புத்தகங்களை போட்டு கட்டி, தனது தலையில் வைத்துக் கொண்டு, வழக்கறிஞர்கள் இருக்கும் அறையில் கொண்டு போய் இறக்கிவைத்து விட்டு கூறினா ராம் “உன்னுடைய  பூநூலுக்கு மட்டு மல்ல, எங்களுடைய வலை நூலுக்கும் சட்டப் புத்தகம் இனிமேல் வசப்படும் என்பதை புரிந்துகொள்” என்று குலக் கல்வி முறைக்கு எதிராக முழக்க மிட்ட மகத்தான மனிதர் சிந்தனை சிற்பி சிங்காரவேலர். இன்று நமக்கெல்லாம் படிப்ப தற்கான வாய்ப்பு ஓரளவிற்கு உள்ளது. ஆனால் சிங்காரவேலர் அன்று தடை செய்யப்பட்ட மார்க்சிய நூல்களை ரஷ்யாவில் இருந்து புதுச்சேரிக்கு (புதுவையில் பிரெஞ்சு அரசு) வரவழைத்து, அங்கிருந்து கரு வாட்டுக் லாரியில் மறைத்து வைத்து எடுத்து வந்து படித்தார். ஆனால் இப்போது புத்தகங்கள் எளிதில் கிடைக்கின்றன. எனவே மாணவர்கள் நன்றாகப் படியுங்கள். நம்மை படிக்க விடாமல் தடுப்பதற்காகவே மீண்டும் குலக்கல்வி முறையை விஷ்வ கர்மா என்ற பெயரில் கொண்டுவர பாஜக துடிக்கிறது.  ஏகலைவன் கட்டை விரலை வெட்டிய துரோணாச்சாரி யாரைப் போல் இன்று நம்முடைய நாக்கை வெட்டிக் கேட்கிறார்கள். நம்மை கல்வி கற்க விடாமல் நம் கண்களை பறிக்கப் பார்க்கிறார்கள். அன்று இருந்த குருகுல முறையை, குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். சந்திரனுக்கும், சூரியனை ஆராயவும் தயாராகிவிட்ட நிலையில், இன்னும் சிலர் ஜோதிடம் என்ற பெயரில் கட்டங்களை போட்டு வைத்துக் கொண்டு, அது உன் தலைவிதி, உனக்கு ஏழரை சனி எனக் கூறிக் கொண்டி ருக்கிறார்கள்.  நாம் முதலில் மூட நம்பிக்கையில் இருந்து வெளிவர வேண்டும். “ஜோதிடம் தனை இகழ்” என்று கூறினார்கள். எனவே நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு யார் காரணம் என சிந்தித்து பார்க்க வேண்டும். வள்ளலார் சாதி, மதங்களுக்கு எதிராக “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்று கூறினார். ஆனால் கிண்டியில் உள்ள ஒருவர் வள்ளாலார் சனாதனத்தின் உச்சம் என வள்ளலார் மீதே சனாதன பேயை ஏவிக் கொண்டிருக்கிறார். “கலை உரைத்த கற்பனைக் கதைகளில் கண் மூடி பழக்கம் எல்லாம் மண் மூடி போகட்டும்” என்று வள்ளலார்தான் கூறினார். பிரச்சனைகளை எதிர்த்து யார் போராடுகிறார்களோ அவர்க ளுக்குத்தான் தீர்வு கிடைக்கும். சிங்கார வேலர், வள்ளலார், பெரியார்,

அம்பேத்கர் காட்டிய வழியை பின்பற்று வோம், அப்போதுதான் நிதி நிலைக்கும் என்று அவர் பேசினார். அனைத்திந்திய மாணவர் பெரு மன்றத்தின் துணைத் தலைவர் மார்க்சியா, வழக்கறிஞர் சம்கிராஜ் ஆகியோரும் பேசினர். வழக்கறிஞர்களுக்கு பாராட்டு  நிகழ்ச்சியில் நீதி மறுக்கப்பட்ட வாச்சாத்தி பழங்குடி மக்களுக்காக நீதிமன்றத்தில் வழக்காடி நீதியை நிலைநாட்டிய அகில இந்திய வழக்க றிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த கே.சுப்பு ராம், ஜி.சம்கிராஜ், கே.இளங்கோ ஆகி யோருக்கு மதுக்கூர் ராமலிங்கம் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டி னார். அதேபோல் தமிழ் ஒளி நூற்றாண்டையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி அவசியம் குறித்து பேசினர். புதுச்சேரி உமா அமர்நாத் குழுவினரின் கிராமியப் பாடல்கள், மொய்ம்பு கலைக்குழுவின் தப்பாட்டம், ஒயிலாட்டம், வட சென்னை துரை குழுவின் சிலம்பாட்டம் வெகுவாக அனைவரையும் கவர்ந்தது. முன்ன தாக மூத்த தலைவர் வீர அருண் பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தார். இதில் மாநிலக் குழு உறுப்பினர்  முனைவர் பகத்சிங், மாவட்டத் தலை வர் தளவை ராஜேந்திரன், செயலாளர் மணிநாத், மாவட்டக் குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணா, அலிபாஷா, முனியசாமி, நிர்வாகி விஜயலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.