districts

சென்னை முக்கிய செய்திகள்

அண்ணா பல்கலைக் கழகத்தில் புதியதாக 30 சிசிடிவி கேமராக்கள்

சென்னை, டிச.29- சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஞான சேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலி யல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாது காப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.இந்நிலையில், மாணவிகளின் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 140 காவலாளிகள் உள்ள நிலையில், கூடுத லாக 40 காவலாளிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தில் பழுதடைந்த சிசிடிவி களை உடனடியாக சரி செய்ய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவிகள் பாதுகாப்பிற்காக பல்கலைக்கழகத்தில் கூடுதலாக 30 சிசிவிடி கேமிராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கவுன்சிலர்கள்  8 பேர் பதவி பறிக்கப்படுமா?

சென்னை, டிச.29- தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சி யாக உள்ள சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. இதில் உள்ள கவுன்சிலர்கள் சிலர் மீது தொடர் புகார்கள் அரசுக்கு சென்ற வண்ணம் இருந்தது. பதவியை பயன்படுத்தி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் , ஒப்பந்ததாரரை மிரட்டுதல், கழிவுநீர் இணைப்பு கொடுப்ப தற்கும், வீடுகள் கட்டுவதற்கும் கூடுதல் பணம் கேட்பது, அதிகாரிகளை ஒருமை யில் பேசுவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. குறிப்பாக விரிவாக்கப்பட்ட மண்ட லங்களான சோழிங்கநல்லூர், பெருங் குடி, ஆலந்தூர், மாதவரம் ஆகிய மண்ட லங்களில் அதிக புகார்கள் வந்திருந்தது. இதுகுறித்து உளவுத்துறை அதிகாரி களும், மாநகராட்சி அதிகாரிகளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவ னத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது தவறுசெய்யும் கவுன்சிலர்கள் மீது பாகுபாடின்றி கடும் நடவடிக்கை எடுங்கள் என்று அவர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் சென்னை மாநகராட்சியின் திமுக கவுன்சிலர்கள் 3 பேர், அதிமுக கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 4 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டிருந்தது. அவர்கள் 4 பேரும் அரசுக்கு விளக்க கடிதம் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் இப்போது மேலும் 4 கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் ஆளும் திமுக கவுன்சி லர்கள் 3 பேர், அதிமுக கவுன்சிலர் ஒருவர் என 4 பேருக்கு நோட்டீஸ் சென்றுள்ளது. அதனால் 8 கவுன்சிலர்கள் கலக்கத்தில் உள்ளனர். இவர்கள் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து கவுன்சிலர் பதவி தப்புமா, இல்லையா என்பது தெரியவரும். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் 52-வது பிரிவு படி கவுன்சிலரை பதவி நீக்கம் செய்தால் அடுத்த மாநகராட்சி தேர்தல் அறி விக்கப்படும் வரை அல்லது நீக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு வருடம் வரை மீண்டும் தேர்தலில் நிற்க தகுதியற்றவர் ஆகிவிடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய கிரிக்கெட்:  சென்னை உயர்நீதிமன்ற அணி வெற்றி

சென்னை, டிச.29- சென்னையில் நடைபெற்ற வழக்கறி ஞர்களுக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அணி வெற்றி பெற்றது. வழக்கறிஞர்களுக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி கடந்த 1998 ம் ஆண்டு துவங்கி, 27 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களில் நடை பெற்று வருகிறது. அந்த வகையில் 2024க்கான போட்டி சென்னையில் நடைபெற்றது. இதன் துவக்க விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.டி ரவிக்குமார் உஜ்ஜல் புயான், ஆர்.மகாதேவன் ஆகியோருடன் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விழாவை துவக்கி வைத்தார். இந்த கிரிக்கெட் போட்டியில் அலகா பாத், ஆந்திர பிரதேஷ், தில்லி, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் ஹரியானா, கேரளா, சென்னை, ஒடிசா, மகாராஷ்டிரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களை சேர்ந்த வழக்கறிஞர்களுடன் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்த கிரிக்கெட் போட்டிகள் சென்னை ஐ.ஐ.டி. விளையாட்டு மைதானம், ஏ.எம் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானம், பச்சையப்பன் கல்லூரி விளை யாட்டு மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இறுதி போட்டி சென்னை உயர்நீதிமன்ற வழக்க றிஞர்கள் அணிக்கும், அலகாபாத் உயர்நீதி மன்ற அணிக்கும் நடைபெற்றது. 20 ஓவர் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் பரிசு கோப்பையை வழங்கினார்.

கடலில் தத்தளித்த மியான்மர்  நாட்டவரை மீட்ட காசிமேடு மீனவர்கள்

சென்னை, டிச. 29- காசிமேட்டை சேர்ந்தவர் லோகு. இவர் 8 பேருடன் தனது விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தார். மாமல்லபுரம் அருகே கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மூங்கிலால் செய்யப்பட்ட படகு ஒன்று தென்பட்டுள்ளது. அதில் ஒரே ஒருவர் மட்டும் இருந்த நிலையில் தன்னை காப்பாற்றுமாறு சைகை காட்டியுள்ளார். அவர் பேசிய மொழி காசிமேடு மீனவர்களுக்கு புரியவில்லை. இருப்பினும் அவர் உதவி கேட்கிறார் என்பதை அறிந்து அவரது மூங்கில் படகை தங்களது விசைப்படகில் கட்டி அவரை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்திற்கும், கடலோர காவல் படையினருக்கும் தகவல் அளித்தனர். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அவர் மியான்மர் நாட்டை சேர்ந்த ஷாங்க் மாமா (37) என்பதும், 64 நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது. காற்றின் வேகத்தில் திசை மாறி வந்தாரா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து  தங்க நாணயம் திருட்டு

சென்னை, டிச. 29- சென்னை, நங்கநல்லூர், 5வது மெயின் ரோடு, நித்யா பிளாட்ஸ் என்ற முகவரியில் வசித்து வரும் ஜனார்த்தனன் (42). தனது வீட்டை பூட்டிவிட்டு அவரது மனைவியுடன் உறவினர் இறப்பு சடங்கிற்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, வீட்டின் பீரோவில் வைத்திருந்த 29 சவரன் எடை கொண்ட 29 தங்க நாணயங்கள் மற்றும் ரூ.1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஜனார்த்தனன் பழவந்தாங்கல் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்தும், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், மேற்படி திருட்டில் ஈடுபட்ட ராஜா அண்ணாமலைபுரத்தைசேர்ந்த ஆனந்த் (49),  என்பவர் கைது செய்யப்பட்டார்.  அவரிடமிருந்து புகார்தாரர் வீட்டில் திருடிய அனைத்தும் மீட்கப்பட்டது. மேலும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இவர் மீது ஏற்கெனவே திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஆனந்த் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை: 2 பேர் கைது

சென்னை, டிச. 29- வண்ணாரப்பேட்டை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், வெளி மாநில மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, கம்பெனி சத்திரம் தெரு சந்திப்பில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை துண்டு காகிதத்தில் எழுதி கொடுத்து, சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த, ஜாகிர்பாஷா (49) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.20,600-, 3 செல்போன்கள் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஜாகிர் பாஷா கொடுத்த தகவலின்பேரில், வண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய நாராயணன் (53) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.4,000-, 1 இருசக்கர வாகனம், 2 செல்போன் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஜாகிர் பாஷா, நாராயணன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

வண்டலூர் உயிரியல் பூங்கா ஜன.1 திறந்திருக்கும்

சென்னை, டிச.29- வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. பார்வை யாளர்கள் வழக்கம் போல் பூங்காவிற்கு வந்து செல்லலாம். அரிய வகை விலங்கு கள், பறவைகள் பரா மரிக்கப் பட்டு வரும் இப்பூங்காவுக்கு தினசரி 2500 - 3000 பேர் வரை வந்து செல்கின்றனர். விடு முறை,பண்டிகை நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். பூங்காவிற்கு வரு வோர், விலங்குகள் தொடர் பான திரைப் படங்களை நவீன தொழில் நுட்பத்தில் கண்டு களிக்கும் வகை யில், 7டி தியேட்டர் கட்டப் பட்டுள்ளது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை இருப்பதால் 7 டி திரையரங்கை காண தென் மாவட்டங்கள், சென்னையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர். மேலும் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயி ரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் செவ்வாய்க் கிழமை தோறும் பராமரிப்பு பணிகள் காரணமாக விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்த நிலை யில் 2025ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு, வரும் டிசம்பர் 31 அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறி வித்துள்ளது. எனவே பார்வையாளர்கள் வழக்கம் போல் பூங்காவிற்கு வந்து செல்லலாம்.

பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிப்பு

திருவள்ளூர், டிச.29- மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரி, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்த ஏரிக்கு வடகிழக்கு பருவ மழை காரண மாக நீர்ப் பிடிப்பு பகுதிகளில் இருந்து மழை நீர் தொடர்ந்து வந்து கொண்டி ருக்கிறது. அவ்வாறு வரும் மழைநீர் மிக அதிகளவில் வந்ததால், கடந்த 12 ஆம் தேதி முதல், 18 ஆம் தேதிவரை பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி இரவு திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை, மிதமான மழை பெய்தது. அதுமட்டுமல்லா மல், ஆந்திர மாநிலம்- கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 26 ஆம் தேதி இரவு முதல், 27 ஆம் தேதி காலை வரை விநாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வந்ததால், அந்த ஏரியின் பாது காப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக, மீண்டும் உபரி நீரை நீர் வள ஆதாரத் துறையினர் வெளியேற்றி வருகின்றனர். விநாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நீர் வரத்து அதிகரிப்பு காரண மாக தற்போது விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

விழுப்புரத்தில் நிலம் தொடர்பாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

விழுப்புரம், டிச.29- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜனவரி 3ஆம் தேதி நிலம் தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாரம் தோறும் திங்கட்கிழமையில் பொதுமக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது, இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் பொதுமக்களிடமிருந்து பெறபட்டு வருகிறது. அதில் நிலம் தொடர்பாக அதிகளவில் மனுக்கள் வருகிறது.அதனால் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் வரும் 3- ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 கூட்டம் தொடங்கி நடக்கவுள்ளது, அந்த கூட்டத்தில் நிலம் தொடர்பாக பட்டா மாற்றம், நிலம் ஒப்படை, இலவச வீட்டு மனை பட்டா, ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு, நிலக்கையகம் உள்ளிட்ட பல்வேறு நிலம் தொடர்பான கோரிக்கை மனுக்கள் மட்டுமே பொதுமக்கள் நேரடியாக வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி  தெரிவித்துள்ளார்.

இ- சேவை மையம் மூலம்  வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கலாம்

சென்னை, டிச.29-  இ-சேவை மையம் மூலம் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்குமாறு ஓய்வூதியவர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஓய்வூதிய விதிகளின்படி, கடந்த 1998 ஆம் ஆண்டு செப்.1 ஆம் தேதி முதல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர் ஒவ்வொருவரும் ஆயுள் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் சமர்ப்பித்து வருகின்றனர். அவர்கள் மூத்த குடிமக்கள் என்பதால் ஆயுள் சான்றிதழை அரசு கட்டுப்பாட்டின் கீழ் அந்தந்த பகுதியில் உள்ள இசேவை மையத்தில் சமர்ப்பிக்கலாம் என ஓய்வூதிய நிதி பொறுப்பாட்சி அறக்கட்டளை அறிவித்துள்ளது. எனவே, அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றிதழை இ-சேவை மையத்திலோ, பணிமனைகளில் நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம். இ-சேவை மையத்தில் சமர்ப்பிக்கும்போது, ஓய்வூதிய ஆணை படிவம், வங்கி புத்தகம், ஆதார் அட்டை, புகைப்படம், செல்போன் எண் ஆகியவற்றை எடுத்துச் சென்று, டிஎன்எஸ் 103 இணைய முகப்பில் பதிவு செய்யுமாறு கோர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.