புதுச்சேரி,ஜூன் 9- சிஐடியு தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் புதிய பெயர் பலகை திறப்பு விழா புதுச் சேரி மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. பைபாஸ் சாலையில் தனியார் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் காளி முத்து தலைமையில் சிஐடியு புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் ஜி.சீனிவாசன் சங்க கொடியை ஏற்றி வைத்தார். சங்கத்தின் புதிய பெயர் பலகையை கவுரவத் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். மாநில தலைவர் பிரபுராஜ், தனி யார் போக்குவரத்து தொழி லாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மதிவாணன் ஆகியோர் சங்க உறுப்பி னர்களுக்கு அடையாள அட்டையை வழங்கி வாழ்த்தி பேசினர். விழாவில் சிஐடியு மாநில நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ராஜ்குமார், தினேஷ்குமார், விஜயகுமார் மற்றும் ஜோதிமணி, சாரதி, சகாய ராஜ், ராஜா உட்பட திரளான திரளான தனியார் போக்கு வரத்து தொழிலாளர்கள் பங்கேற்றனர்.