விழுப்புரம், ஜன.13- விழுப்புரம் நகராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை திங்கட்கிழமை (ஜன.13) தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டம் -வி.மருதூரில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் ரூ.3 கோடியே 72 லட்சம் செலவில் தொழிலாளர் நலத் துறைக்கு புதிய அலு வலகம் கட்டப்பட்டது. இதை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் தொடர்ந்து வைத்தார். இதில் வனத்துறை அமைச்சர் க. பொன்முடி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், தொழிலாளர் ஆணை யர் அதுல் ஆனந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் கொ.வீர ராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் பா. விஷ்ணு சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பழனி குத்து விளக்கு ஏற்றி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் சதீஷ் உட்பட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.