சென்னை,ஜன.19- மதுரை மாவட்டம், கொடிக்குளம் கிராமத்தில் அரசுப் பள்ளி நிறுவுவதற்கு சந்தை மதிப்பில் ரூ.7 கோடிக்கு மேல் பெறுமான முள்ள 1.52 ஏக்கர் நிலத்தை அரசுக்கு வழங்கிய வங்கி ஊழியர் ஆயி பூரணத்தை பாராட்டி சென்னையில் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் கனரா வங்கி பணியாளர் சங்கத் தின் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா அவர், ‘இத்தனை அரிய நற்பணி செய்தும் குழந்தைமை மாறாத வெள்ளை உள்ளத்தோடு அவர் பழகுவது வியப் புக்கு உரியது’ என்று பாராட்டினார். பூட்டி வைத் துக் கொள்ள ஏதுமற்றவர்கள் பாக்கியசாலிகள் என்று பியோதர் தஸ்தயெவ்ஸ்கி யின் குற்றமும் தண்டனை யும் நாவலில் வரும் வரி தான் எனக்கு நினைவு வந்தது. நம்பிக்கையே அற்ற காலமாகப் பொது வெளியில் பேசும் நேரத்தில், மிகுந்த நம்பிக்கையை அடையாளப்படுத்தி யுள்ளார் ஆயி பூரணம் என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் கனரா வங்கி வட்ட அலுவலகத்தில் துணை பொது மேலாளர் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று விட்டு, தேனாம் பேட்டை நரேஷ் பால் மையத்தில் உள்ள தனது சங்க அலுவலகத்திற்கும் வந்தார். கனரா வங்கி பணியாளர் சங்கத் தலைவர் எஸ்.பிரேமலதா தலைமையில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில், சங்கத்தின் மாநில செயலாளர் அஜ்ஜு மகேந்திரன், முன்னாள் அகில இந்திய செயலாளர் என் ராஜகோபால், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழ் மாநிலக்குழுவின் கவுரவ ஆலோசகர் தி. தமிழ ரசு, தலைவர் சுனில் குமார், பொதுச் செயலாளர் டி.ரவிக் குமார், எஸ்.வி.வேணு கோபாலன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு முன்னாள் செயலாளர் எம்.ராஜேஸ்வரி ஆகியோர் எளிய மக்களுக்கு நிறைய உதவிகளும், கல்விக்காக நன்கொடையும் மட்டுமின்றி சிறுநீரக தானமும் செய் துள்ள பூரணம்மாள் குறித் துப் பாராட்டுரை நிகழ்த்தி னர். சங்கத்தின் முன்னாள் நிர்வாகி மதுரை கவிஞர் மலர்மகள் கவிதை வாசித்து சிறப்பித்தார். ஏற்புரை வழங்கிய ஆயி பூரணம், தனது கணவரை விபத்தில் பறிகொடுத்துக் கலங்கி நின்ற போதும், அருமை மகளை இழந்து பரிதவித்த போதும் தொழிற் சங்கமே தனக்கு பக்க பல மாக இருந்ததால் தான் வாழ்க்கையின் சோத னைகளை எதிர்கொள்ள முடிந்தது என்றார். அன்பே உலகின் ஆதாரம் என்று நன்றி தெரிவித்துக் கொண்டார்.