கோயம்பேடு: காய்கறிகள் விலை குறைந்தது
சென்னை, செப்.22- கோயம்பேடு, மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தினமும் 500க்கும் மேற்பட்ட லாரி களில் காய்கறிகள் விற்ப னைக்கு குவிந்து வருகிறது. வரத்து அதிகரிப்பால் கத்தரிக்காய், அவரைக் காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த விற்பனையில் வரி கத்தரிக் காய் கிலோ ரூ.10க்கும், அவரைக்காய் மற்றும் கொத்தவரங்காய் கிலோ ரூ.15-க்கும், வெண்டைக் காய் கிலோ ரூ.10-க்கும் விற்பனை ஆகி வருகிறது. பீன்ஸ் மற்றும் ஊட்டி கேரட் கிலோ ரூ.50-க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து தக்காளி ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரையிலும், நாசிக் வெங்காயம் ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.55 வரையிலும் விற்கப்படு கிறது. வரத்து குறைவால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை விபரம் வருமாறு (கிலோவில்):- உஜாலா கத்தரிக்காய்-ரூ.30, பன்னீர் பாகற்காய்-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.25, பச்சை மிளகாய்-ரூ.15, முட்டை கோஸ் ரூ.12, புடலங்காய்-ரூ.10, சுரக்காய் ரூ.8விலைக்கு விற்கப்படு கிறது.
இயற்கை உபாதை கழிக்கச் சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
சென்னை, செப்.22- சென்னையில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு பயின்றுவரும் 16 வயது பள்ளி மாணவி ஒருவர், கடந்த 18ஆம் தேதி மாலை பள்ளி முடித்து வீடு சென்ற நிலையில், இயற்கை உபாதை கழிக்க திறந்தவெளி பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவியின் உறவினர்களான 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் 23 வயது இளைஞர் உள்ளிட்ட 3 பேர் மாணவியிடம் பேச்சு கொடுத்து தூக்கிச் சென்று காட்டுப் பகுதியில் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, வீடு திரும்பிய மாணவி அவரது தந்தையிடம் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மாணவியை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு முறையாக மருத்துவப் பரிசோதனை நடைபெற்று ஆதாரங்கள் திரட்டப்பட்டது. அதே வேளையில், உதவி ஆணை யாளர் வெங்கடேசன், ஆய்வாளர் சார்லஸ், உதவி ஆய்வாளர் சுந்தர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்ட நபர்களைத் தேடிய நிலையில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்று பேரும் தலைமறைவாக இருந்ததாக தெரி விக்கப்பட்டது. இருந்தபோதிலும், தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர், 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் 23 வயது நபர் ஆகிய மூன்று பேரையும் கண்டுபிடித்து, அவர்களைக் கைது செய்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதன் தொடர்ச்சியாக, குற்றம் சுமத்தப்பட்ட 16 வயது சிறுவர்கள் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனை அடுத்து, சிறுவர்கள் இரண்டு பேரையும் செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளிக்கும், 23 வயது நபரை புழல் சிறைக்கும் அனுப்பிவைத்தனர்.