districts

img

கொரானா நிவாரணமாக மாதம் ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும்

சிதம்பரம், மே 10- கொரானா நிவாரணமாக மாதம் ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும் என பிச்சாவரம் சுற்றுலா படகு தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பிச்சாவரம் சுற்றுலாமைய படகு ஓட்டும் தொழிலாளர் (சிஐடியு) சங்கத்தின் சார்பில் சிறப்பு தலைவர் ரமேஷ்பாபு தலைமையில் தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் ராஜா, பொருளாளர் நடராஜன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரானா நோய் 2ஆவது அலையின் காரணமாக கடந்த 2021 ஏப்ரல் மாதம் 20ஆம்  தேதி முதல் பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா படகு ஓட்டும் தளத்தில் எந்த படகும் இயக்கப்படவில்லை. இந்த சுற்றுலா தளத்தில் படகு ஓட்டுவதை நம்பியே 50 குடும்பங்கள் கடந்த 35 ஆண்டுகளாக பிழைப்பு நடத்தி வருகிறோம். அரசின் பொதுமுடக்க உத்தரவால் எங்களின் பிழைப்பு மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரானா நிவாரண நிதி யாக 3 தவணையில் ரூ 5 ஆயிரம் வழங்கப்  பட்டது. இந்த நிவாரணம் எங்கள் பசி பட்டி னியை போக்குவதற்கு உதவியாக இருந்தது. தற்போது 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. நாங்கள் கமிஷன் அடிப்படை யில் படகு ஓட்டுவதால் குறைந்த வருமானமே  கிடைத்து வருகிறது. இப்போது பொது முடக்கம் அறிவித்துள்ளதால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்து வறுமை யில் உள்ளோம். எனவே கொரானா காலம் முடியும் வரை மாதம் ரூ 5 ஆயிரம் வீதம் நிவா ரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சி யர் மதுபாலன் இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக சஙக நிர்வாகிகள் தெரிவித்தனர்

;