districts

img

தோழர் கே.என்.வெங்கடேசன் காலமானார்

சென்னை, ஜன. 19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேவநேசன் நகர் கிளை உறுப்பினர் தோழர் கே.என்.வெங்கடேசன் செவ்வாயன்று (ஜன.18) கால மானார். அவருக்கு வயது 78. தாம்பரம் பகுதி, பீர்க்கன் கரணை பேரூராட்சி, தேவநேசன் நகரில் வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி யின் கிளைகளை துவக்கிய வர் கே.என்.வெங்கடேசன். தனது மகன், மனைவி, மருமகள், பேரப்பிள்ளைகள் அனைவரையும் கட்சி உறுப்பினராக மாற்றியவர். தேவநேசன் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த உடலுக்கு கட்சி யின் மாவட்டச் செயலாளர் கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி. செல்வா (மத்தியசென்னை), மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, சிபிஎம் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.குமார், ஜி.செந் தில்குமார், சுந்தர், தாம்ப ரம் தொகுதிச் செயலாளர்  த.கிருஷ்ணா, கிளைச் செயலாளர் முருகானந்தம், மாவட்டச் செயலாளர்கள் ம.சித்ரகலா (மாதர் சங்கம்), தீ.சந்துரு (வாலிபர் சங்கம்), ரா.பாரதி (மாணவர் சங்கம்) உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியதை செலு த்தினர். இதனைத்தொடர்ந்து அன்னாரது உடல் புதனன்று (ஜன.19) வேல்நகர் மயா னத்தில் அடக்கம் செய்யப் பட்டது. தாம்பரம் பகுதிச் செய லாளராக பணியாற்றி மறை ந்த க.வெ.ராதாகிருஷ்ண னின் தந்தை கே.என்.வெங்க டேசன் என்பது குறிப்பிடத் தக்கது.