கே.கே.நகர் தென்சென்னை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் ஜெகதீசன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், கிளை செயலாளர்கள் பண்டாரம் பிள்ளை (தெற்கு-1), கவுதமன் (தெற்கு-2) உள்ளிட்டோர் பேசினர்.