வேளச்சேரி,ஜூன் 27-
சென்னை கிழக்கு கடற்கரை சாலை 6 வழி சாலையாக விரிவு படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் வேக மாக நடந்து வருகிறது.
இதில் திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை யிலான கிழக்கு கடற்கரை சாலையை (இ.சி.ஆர்.) அகலப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி சாலையோரம் இருந்த ஏராளமான வீடு கள், கடைகள், கட்டி டங்கள் இடித்து அகற்றப் பட்டன. இதே போல் கொட்டி வாக்கம், பாலவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் சாலையோரங் களில் உள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கான நடவடி க்கைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி வருகி றார்கள். கட்டிடங்கள் அகற்ற ப்பட்ட இடங்களில் சாலை யோரம் உள்ள மின் கம்பங்கள், டிரான்ஸ்பார் மார்கள் அகற்றப்பட உள் ளது.
இதற்கான டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த டெண்டர் ஒதுக்கி யதும் 3 மாதத்தில் இந்த பணி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.