கள்ளக்குறிச்சி, ஆக.18- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி 674 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை, முதலுதவி பெட்டிகள், காலணிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். பின்னர்கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஆட்டோ ஓட்டு நர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதில் தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் உஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.