districts

img

சிபிஎம் கடலூர் ஒன்றியக் குழு அலுவலகம் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்

கடலூர், ஆக. 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் ஒன்றியக் குழு அலுவலத்தின் புதிய கட்டிடத்தை (ஆர்.என்.எஸ் சென்டர்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமையன்று (ஆக. 28) திறந்து வைத்தார். கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக திறப்பு நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் ஜே.ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.தட்சிணாமூர்த்தி வரவேற்றார். மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கட்சி கொடியை ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் உள்ளரங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம் பெயர் பலகையை திறந்து வைத்தார். செயற்குழு உறுப்பினர் வி.உதயகுமார் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார். இதில் மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, ஜி.மாதவன், பி.ஜான்சிராணி, மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், ஆர்.ராமச்சந்திரன், எஸ்.திருஅரசு, வி.சுப்புராயன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.கந்தசாமி, என்.அய்யா துரை, இ.தயாளன், பி.அல்லிமுத்து பி.பாண்டுரங்கன், ஆர்.பஞ்சாட்சரம் ஏ.வைத்திலிங்கம், பி.பாண்டியன், ஜி. கணேசன், கே.சுரேஷ் குமார், இ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;