திருத்தணி அருகே வீரகநல்லூர் ஊராட்சி பகத் சிங் நகரில் ஜே எம் ஜே சமூக சேவை அறக்கட்டளை சார்பாக ஆண்டு விழா புதனன்று நடைபெற்றது. வீரகநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் காதர் பாஷா, தாடூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பாலாஜி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொறுப்பாளர் சக்தி சிவா ஆகியோர் பங்கேற்றனர். ஜேஎம்ஜே நிறுவனத்தின் திட்ட மேலாளர் லிசினா மேரி திட்ட பணிகள் குறித்து விளக்கவுரை ஆற்றினார். மேலும் களப்பணியாளர்கள் திட்ட செயல்பாடுகள் குறித்து நாடகம் , பாடல்கள் வழியாக விளக்கினர்.