மீண்டும் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கலைக்குமார், சுதர்சனன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் அலோசியஸ் துரைராஜ், மணிகண்டன், அகஸ்தியன், ராஜசேகரன், பாலாஜி, ஜெயசுதா, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.முகமது உசேன் ஆகியோர் பேசினர்.