திருவண்ணாமலை, டிச.2- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் வசிக்கும் பழங்குடியின இருளர் இன மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்க வலியுறுத்தி கோட்டை முனையிலிருந்து வட்டார செயலாளர் அப்துல் காதர் தலைமையில் புறப்பட்ட ஊர்வலம் வட்டாட்சியர் அலுவலகத்தை சென்ற டைந்தது. அங்கு தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சதீஷி டம் கோரிக்கை மனு அளித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, இசைக்குழு உறுப்பினர்கள் யாசர் அரபாத், வழக்கறி ஞர் சுகுமார், ஆனந்த், நகரச் செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் கரும்பு விவசாயி நிர்வாகி அரிதாசு உள்ளிட்ட பலர் உடனிருந்த னர்.