சென்னை, ஆக.3
கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மின்சார மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பு நிறு வனமான பாரத் நியூ-எனர்ஜி நிறுவனம் (பிஎன்சி), தனது பிரத்யேக மற்றும் முதல் டீலர்ஷிப்பை சென்னையில் ‘கிராண்ட் மோஸ்’ என்ற பெயரில் திறந்துள்ளது.
இந்த புதிய ஷோரூம் சென்னை, போரூரில் எஸ்வி மகால் அருகே திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை யொட்டி இளம் தலைமுறையினரை கவரும் வகையில் புதுமைமிக்க, சிறந்த செயல்திறன் மிக்க பிஎன்சி சேலஞ்சர் எஸ்110 என்ற பைக்கையும் அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து பிஎன்சி மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனிருத் ரவி நாராயணன் கூறுகை யில், எங்களின் சேலஞ்சர் எஸ்110 பைக் முற்றிலும் தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது என்றார். சிறப்பு சலுகையாக பேட்டரிக்கு 5 ஆண்டு கூடுதல் உத்தர வாதத்தை பிஎன்சி வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.