districts

img

கர்ப்பிணி பெண்களுக்கு உதவ புதிய 'செயலி' அறிமுகம்

சென்னை, ஜூன் 26-

    தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்கத்தின் (ஆக்சி) மாநாடு  தலைவர் டாக்டர் ஜெய ராணி காமராஜ் தலை மையில் சென்னையில் நடைபெற்றது.தென்சென்னை நாடாளு மன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மாநாட்டை துவக்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு உதவக் கூடிய புதிய செயலியை அறிமுகம் செய்தார்.

    ஜெயராணி பேசுகை யில், மதுரையில் ஒரு கிராமம் கும்மிடிப்பூண்டி யில் ஒரு கிராமம் என 2 கிராமங்களை தத்தெடுத்து அங்கு வசிக்கும் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகளையும் அவர்களுக்கு மேற் கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்தும் விளக்கினார்.  

    கருத்தடை மாத்திரை கள், சாதனங்கள் இப்போது அரசு மருத்துவமனைகளில் மட்டும் வழங்கப்படுகிறது. இதனை தனியார் மருத்துவமனைகளில் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாலியல் சீண்டல்கள் மற்றும் பாலியல் பிரச்சனை யிலிருந்து மீண்டுவர மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வியில் பாலியல் கல்வியை கட்டாயம் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில்  பெண்களுக்கு கர்ப்பம் தரித்த காலத்தில் இருந்து எந்தெந்த நேரங்களில் என்னென்ன சோதனைகள் செய்து கொள்ள வேண்டும் என்றும், எந்த நேரத்தில் எந்த வகையான உணவு களை உட்கொள்ள வேண்டும் என்றும், மருத்து வர்களை எப்போது எல்லாம் அணுக வேண்டும் என்றும் நினைவுபடுத்தி கூறும் வகையில் புதிய 'செயலி' (ஆப்) அறிமுகப் படுத்தப்பட்டது.

    டாக்டர் ஹெப்சிபா வடி வமைத்துள்ள இந்த இலவச செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் சென்று  Reminder App for Expectant MOM என்று டைப் செய்தால் இந்த ஆப் பை டவுன்லோட் செய்து கொள்ளலாம். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் உள்ளது. சரியான இடைவெளியில் 28 நாட்கள் மாதவிடாய் வரும் பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை மேற்கொண்டு பாசிட்டிவ் என்று தெரிந்ததும் இந்த செயலியில் பதிவு செய்து கொண்டால் அப்போது முதல் சரியான விவரங்கள் கிடைத்துவிடும். இந்த செயலி கர்ப்பிணிப் பெண்களுக்கு கையடக்க தகவல் திரட்டு ஆகும்.  

    இந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்கத்தின் பாக்சி நிர்வாகிகள் சாந்தகுமாரி, மகாபத்ரா,  அல்கா பாண்டே, மாதுரி பட்டேல், கீதேந்திர ஷர்மா, துணைத் தலைவர் விஜயா, செயலாளர் குந்தவை சங்கர், பொருளாளர் கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.