சென்னை, ஜூன் 2- சென்னையைச் சேர்ந்த வாட்டர் டுடே என்ற மாத இதழ் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தண்ணீர் கண் காட்சி 2022 சென்னை நந்தம் பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வியாழக் கிழமை தொடங்கியது. கண்காட்சியை யொட்டி சர்வதேச கருத்தரங்கமும் நடைபெற்று வருகிறது. வரும் 5ம் தேதி வரை நடை பெறும் இந்த கண்காட்சி தென்கிழக்கு ஆசியா விலேயே மிகப்பெரிய அள வில் நடத்தப்படும் தண்ணீர் கண்காட்சி என்று வாட்டர் டுடே நிர்வாக இயக்குநர் எஸ் சண்முகம் கூறினார். மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில், உள்நாடு மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட நிறு வனங்கள் தங்கள் தயாரிப்பு களைக் காட்சிக்கு வைத்துள் ளனர். இந்த கண்காட்சியில் குடிநீர், கழிவுநீர் மேலாண்மை மற்றும் மறு சுழற்சி, தண்ணீர் விநியோகம் மற்றும் போக்குவரத்து, குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் மேலாண்மை, கடல் நீரைக் குடிநீராக மாற்றும் தொழில் நுட்பம் போன்ற துறைகளை சேர்ந்த சாதனங்கள், இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.