சென்னை,ஜூலை 1-
இந்திய விவசாயிகள் கூட்டுறவு உர நிறுவன மான இஃப்கோ, முதல் முறையாக சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் (ஐசிஏ) சர்வதேச மாநாட்டை இந்தியாவில் அடுத்தாண்டு ஜூன் மாதம் நடத்த உள்ளது.
பெல்ஜியத்தை தலை மையிடமாக கொண்ட சர்வதேச கூட்டுறவு கூட்டணி (ஐசிஏ) இந்தியாவில் பொதுச் சபைக் கூட்டத் தையும் நடத்தவுள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐசிஏ வாரியக் கூட்டத்தின் போது இஃப்கோவின் நிர்வாக இயக்குநர் யு எஸ் அவஸ்தி இதற்கான தீர்மானத்தை முன்மொழிந் தார். அந்த தீர்மானத்திற்கு ஐசிஏ வாரியம் ஏகமனதாக ஒப்புதல் அளித்தது” என்று இஃப்கோ தெரிவித்துள்ளது.
இதனால் கூட்டுறவுத் துறையில் புதிய வாய்ப்பு களைத் திறப்பதோடு இந்திய கூட்டுறவு நிறுவ னங்கள் உலகளாவிய வணிகங்களில் பங்கேற்க முடியும் என்று அவஸ்தி தெரிவித்துள்ளார்.