சென்னை,ஆக,5- சர்வதேச டிராபிக் சிக்னல் தினத்தையொட்டி சென்னையில் டிராபிக் சிக்னல்களில் உள்ள விளக்குகள் இதய வடிவில் ஒளிரவிடப்பட்டது. இது வாகன ஓட்டிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி யுள்ளது. 110 வருடங்களுக்கு முன்பு 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி உலகின் முதல் டிராபிக் சிக்னல் அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது என்று நம்பப்படுகிறது. அதன் காரணமாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி சர்வ தேச டிராபிக் சிக்னல் தின மாக கொண்டாடப்பட்டு வருகிறது.