districts

சென்னை முக்கிய செய்திகள்

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இண்டர்காம் வசதி

சென்னை,அக்.28- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரயில்களில், பயணிகள் அவசர கால இண்டர்காம் வசதி வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் அவசர கால சூழ்நிலையில் மெட்ரோ ரயில்களில் வைக்கப்பட்டுள்ள அவசர கால சூழ்நிலையில் மெட்ரோ ரயில்களில் வைக்கப்பட்டுள்ள அவசர கால இண்டர்காம் மூலம் மெட்ரோ ரயில் ஓட்டுநரை தொடர்பு கொள்ளலாம். 4 பெட்டிகளை கொண்டு தற்போது இயக்கப்பட்டு வரும் ஒவ்வொரு மெட்ரோ ரயில்களில் 10 அவசர கால இண்டர்காமில் பொருத்தப்பட்டுள்ளது. பெண் பயணிகள் உட்பட அனைத்து பயணிக ளுக்கும் இந்த வசதி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தெரு நாய் கடித்து பெண் குழந்தை மருத்துவமனையில் அனுமதி

சென்னை, அக். 28- திருவொற்றியூர் பெரியார் நகரில் உள்ள விவேகானந்தர் தெருவில் வசிப்பவர் தேவி. இவர் தன்னுடைய குழந்தையுடன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று திடீரென குழந்தையின் மீது பாய்ந்து முகத்தில் கடித்து குதறியது. நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற வந்த தாத்தாவையும் நாய் கடித்தது. காயமடைந்த குழந்தையை அருகில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பகுதி யில் உள்ள ரெட்டைமலை சீனிவாசன் தெரு, ஒத்தவாடை தெரு உள்ளிட்ட இடங்களில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளதாகவும் அந்த தெரு நாய்கள் கடித்து விடும் என்ற அச்சத்துடனே அந்த பகுதி மக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாநக ராட்சியில் புகார் அளித்தால் ஊழியர்கள் வந்து நாயை பிடித்து சென்று திரும்பவும் அந்த பகுதியிலேயே விட்டு விடு வதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  எனவே தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வண்டலூர் பூங்காவுக்கு புதிய வரவுகள்

செங்கல்பட்டு,அக்.28- கோவையில் வ.உ.சி. மினி உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த நிலையில் கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ரத்து செய்தது. இதையடுத்து அங்கிருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகள் மற்ற உயிரியல் பூங்காக்களுக்கு மாற்றப்பட மாற்றப்படுகின்றன. இதில் 10-க்கும் மேற்பட்ட விலங்குகள் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்படுகின்றன. இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை உயிரியல் பூங்காவில் 487 பறவைகள், 62 ஊர்வன பிராணிகள், 8 நாகப்பாம்புகள், 8 சாதாரண வகை பாம்புகள், 5 கட்டு விரியன் பாம்புகள், 11 மலைப்பாம்புகள், 86 பாலூட்டி விலங்குகள் உள்ளன. இதில் கொக்கு, கிளிகள் போன்றவையும் அடங்கும் இந்த விலங்குகள் 45 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும். புதிதாக வரும் விலங்குகள் தனிமைப்படுத்தல் மற்றும் காட்சிப்படுத்துதல் ஆகிய இரண்டிற்கும் தேவையான வசதிகள் மிருகக்காட்சி சாலையில் தயாராக உள்ளன. வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் பறவைகள், ஊர்வன மற்றும் பாலூட்டிகள் கோவையில் இருந்து வண்டலூருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இதற்கு 3 அல்லது 4 நாட்கள் ஆகும். ஜம்மு-காஷ்மீர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி இமயமலை கருப்பு கரடிகளும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகின்றன. ஜம்மு-காஷ்மீரில் இருந்து கரடிகளை கொண்டு வர ஒப்புதல் கிடைத்துள்ளது. கரடிகள் ரயில் மூலம் சென்னைக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

எம்.கே.பி. நகர் கழிவு நீரேற்று நிலையம் நாளை செயல்படாது

சென்னை,அக்.2 8-  சென்னை மாநகராட்சி மண்டலம்-4 தண்டையார்பேட்டை க்கு உட்பட்ட எம்.கே.பி. நகர் கழிவு நீரேற்று நிலையத்தில் கழிவு நீர் உந்து குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் 30-ந்தேதி காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை எம்.கே.பி.நகர் கழிவு நீரேற்று நிலையம் செயல்படாது

விவசாயத்தை பாதுகாக்க முதல்வருக்கு சிபிஎம் கோரிக்கை
கடலூர், அக்.28- கடலூர் மாவட்டம் முழுவதும் தண்ணீர் இன்றி அழிந்து வரும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்று முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பிய மனுவின் விவரம் வருமாறு:- கடலூர் மாவட்டம் முழுவதும் பல ஆயிரம் ரூபாய் செலவழித்து விவசாயம் செய்து தண்ணீர் இன்றி பயிர்கள் காய்வதை கண்டு வேதனை அடைந்து வருகிறார்கள். குறிப்பாக கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்குடி, புவனகிரி வட்டங்களில் காவிரி தண்ணீர் இல்லாமல், மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக தண்ணீர் இல்லாமல் நெற் பயிர்கள் கருகி வருவதால் வாழ்வாதாரத்தை இழந்து விவசாயிகள் தவிக்கின்றனர். இந்த நிலையில், வேர் அழுகல் நோயால் மாவட்ட முழுவதும் கரும்பு பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. திட்டக்குடி, வேப்பூர், விருத்தாசலம் பகுதியில் மக்காச்சோளம் பயிர்கள் அமெரிக்கன் படைப்புழுவால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. மரவள்ளி பயிர் செய்த விவசாயிகள் ஒருவித நோய்களால் மரவள்ளி பாதிக்கப்பட்டுள்ளது. முந்திரி சாகுபடி செய்யும் விவசாயிகள் வெளிநாடுகளில் இருந்து முந்திரிக் கொட்டை இறக்குமதி செய்வதால் போதிய விலை இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், தமிழக அரசாங்கம் பாதிக்கப்பட்ட பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு  தமிழக அரசு நிவாரணம் வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழ்நாட்டில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளை  ஏமாற்றுவதை தடுக்க, தமிழ்நாடு அரசு பயிர் இன்சூரன்ஸ் நிறுவனம் தொடங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

பயிர் காப்பீடு நிறுவனம்  தொடங்க வலியுறுத்தல்

விழுப்புரம்,அக்.28- பயிர் காப்பீடு நிறுவனத்தை தமிழ்நாடு அரசு தொடங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். விழுப்புரம் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் பழனி தலைமையில் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன் பேசுகையில்,“ மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் நடப்பு ஆண்டில் பயிர் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. பயிர் பாதிப்புகளை அளவிடு முறையில் வெளிப்படத்தன்மையில்லை. கிராம அளவில் பயிர் பாதிப்புகளை கணக்கிடும் போது வேளாண்மை துறை, புள்ளியியல் துறை மற்றும் காப்பீடு துறை பயிர் பாதிப்புகளை கணக்கிடும் போது கிராமத்தில் இழப்பீடு கிடைக்கும் விவரங்களை தெரிவிக்க வேண்டும். விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்வதில் காப்பீடு நிறுவனம் கொள்ளை லாபம் அடிப்பதை தடுப்பதற்கு மாநில அரசே ஒரு காப்பீட்டு நிறுவனத்தை தொடங்கி வேண்டும்”என்றார்.

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு

விழுப்புரம்,அக்.28-ல் விழுப்புரம் மாவட்டம், முண்டியம் பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய முதல்வர் பொறுப்பேற்று கொண்டார். சென்னை மருத்துவக் கல்லூரியில் உயிர் வேதியியல் துறைத் தலைவராக பணி யாற்றியவர் பேரா. மரு. கே. ரமாதேவி. இவர் பதவி உயர்வு பெற்று விழுப்புரம் மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வ ராக பொறுப்பேற்று கொண்டார். இந்த நிகழ்வின்போது மருத்துவ கண்காணிப்பாளர்  பொறுப்பு வகிக்கும் மரு. எம். ஆனந்தி, துணை முதல்வர் பொறுப்பு வகிக்கும் மரு. ராஜாராம், அனைத்து துறைத் தலைவர்கள், நிர்வாக அலுவலர்கள் கவிஞர் ம. ரா. சிங்காரம், கே. சக்திவேல், செவிலிய கண்காணிப்பா ளர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

கடலூரில் 4 கிலோ வெள்ளி  பொருட்கள் பறிமுதல்

 கடலூர்,அக்.28- கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில், உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 4.5 கிலோ வெள்ளி பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வெள்ளி கொலுசு, மோதிரம், விளக்கு உள்ளிட்ட நான்கரை கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. ஆனால், அதற்குரிய ஆவணங்கள் கேட்டபோது, கொடுக்கவில்லை. இதையடுத்து அந்த வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.  பிறகு, கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, நாகப்பட்டினத்தை சேர்ந்த ரவி (52) என்பதும், புதுச்சேரியில் இருந்து நாகப்பட்டினத்திற்கு வெள்ளி பொருட்களை விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. பிறகு, அந்த வெள்ளி நகைகளை வணிக வரித் துறையிடம் ஒப்படைத்தனர்.

குழாயில் உடைப்பு
கடலூர்,அக்.28- கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், கடலூரில் பல்வேறு பகுதிகளில்  குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் டவுன்ஹால் வழியாக செல்லும் அந்த குடிநீர் குழாயில் சனிக்கிழமையன்று (அக்.28) அதிக அழுத்தத்தின் காரணமாக உடைப்பு ஏற்பட்டு அதிக அளவில் தண்ணீர் வெளியேறியது. இதனால் தலைமை தபால் நிலையம் பேருந்து நிறுத்தம் அருகே தண்ணீர் ஆறு போல ஓடித் தேங்கி நின்றது.  இது குறித்து தகவல் அறிந்த ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள வால்வை மூடி தண்ணீர் வருவதை நிறுத்தினர். இதன் பிறகு தண்ணீர் வெளியேறுவது நின்றது. அதிக அழுத்தத்தின் காரணமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த குழாய் மூலம் குண்டு உப்புலவாடியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு, அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வால்வு மூடப்பட்டுள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கும் என்று தெரிகிறது. எனவே அந்த உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 பெண் குழந்தைகள் பலி
 

திருவண்ணாமலை,அக்.28- திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகரம் மதுரா காந்திநகர், பனந்தோப்பு கிராமம். இங்கு வசித்து வருபவர் தமிழ்செல்வன்-பிரித்தி தம்பதியின் பெண் குழந்தை சிந்துபாரதி (2) மற்றும் உறவினரான கலசபாக்கம் அடுத்த அனியாலை காம்பட்டு கிராமத்தை சேர்ந்த அசிர்-காவ்யா மகள் பவ்யஸ்ரீ ஒன்றரை வயது மகள் இருவரும் அருகில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து, வீட்டில் குழந்தைகள்  இல்லாததை கண்ட பெற்றோர், கிணற்றின் அருகே சென்று பார்த்தபோது, இரண்டு குழந்தைகள் கிணற்றில் விழுந்துள்ளதை கண்டு,  பக்கத்து நிலத்துகாரர் உதவியுடன் குழந்தைகளை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அப்போது  குழந்தைகள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.  இதையடுத்து குழந்தைகள் மரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.