வேலூர், பிப்.16- காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள எல்ஐசி கோட்ட அலுவலக வளா கத்தில் கோட்டத் தலைவர் எஸ்.பழனிராஜ் தலைமையில் தர்ணா நடைபெற்றது. பொதுத்துறை நிறுவனங்களை பாது காக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும். எல்ஐசி-யில் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை துவக்க வேண்டும். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோட்ட பொதுச்செயலாளர் எஸ்.ராமன், மருந்து மற்றும் விற்பனை பிரதி நிதிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.சத்யநாராயணன்,எம்.பி. ராமசந்திரன், எஸ்.பரசுராமன் (சிஐடியு), சி.ஞானசேகரன் (தொழிற்சங்கக் கூட்டமைப்பு), ஆர்.கேசவன் (எல்ஐசி ஓய்வூதியர்) ஆகியோர் பேசினர்.