ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பாலாறு அணைக்கட்டு தடுப்பணையில் நீர்வளத் துறையின் சார்பில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் பாலாறு அணைக்கட்டினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் பார்வையிட்டு பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.