காப்பீட்டு பாலிசிகள் மீது ஒன்றிய அரசு 18 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கிறது. அதை திரும்ப பெற வலியுறுத்தி மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியனிடம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சென்னை கோட்டம்-1ன் தலைவர் கிரதர், பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ் குமார் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.