districts

img

அத்தியாவசிய பொருட்கள் வழங்க வலியுறுத்தல்...

கோதுமை, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட 14 வகையான பொருட்களை ரேசன் கடைகளில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (ஆக 27), ஆரணி காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் நாகலட்சுமி தலைமையில் மாவட்ட செயலாளர் ஏ.பத்மா, பகுதி நிர்வாகிகள் கவிதா, லாவண்யா, முனியம்மா, சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.இ.சேகர், விதொச மாவட்டத் தலைவர் இ.தவமணி, கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் உமிடி மணி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.