districts

img

சர்க்கரை ஆலைக்கு வழங்கிய நிலத்தில் தொழில் பூங்கா எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது

திருவள்ளூர், ஜன.2 -  சர்க்கரை ஆலைக்கு வழங்கிய நிலத்தில், சிறு தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய விவசாயிகளை செவ்வாயன்று (ஜன 2), காவல்துறையினர்   கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட புதுவாயில் கிராமத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைப்பதற்காக அப்பகுதி விவசாயிகளிடம் தமிழக அரசு விவசாயிகளை பங்குதாரர்களாக சேர்ப்பதாக கூறி ஒரு சென்ட் நிலம் ரூ.1400  என்ற விலையை நிர்ணயம் செய்து சுமார் 120 ஏக்கர் பரப்பிளான விளை நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 30 ஆண்டுகள் ஆகியும் சர்க்கரை ஆலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் கூட தொடங்கப்படாத நிலையில்,  தமிழ்நாடு அரசு திடீரென விவசாயிகளின் ஒப்புதல் இன்றி சட்டத்திற்கு புறம்பாக சிப்காட் சிறு தொழில் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம்  செவ்வாயன்று (ஜன 2),  நிலம் சுத்தப்படுத் தும் பணி நடைபெறுவதை அறிந்த விவசாயி கள் சர்க்கரை ஆலை அமைக்க வழங்கிய  நிலத்தில் சிப்காட் சிறு தொழில் பங்கு  அமைக்க எதிர்ப்பு தெரிவித்து புதுவாயல்  கூட்டுச்சாலையில் விவசாயிகள் திரண்டனர். கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைக்க வேண் டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டும் அரசிற்கு நிலத்தை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர். சர்க்கரை ஆலை வந்தால், இப்பகுதியில் உள்ள இளை ஞர்களுக்கு வேலை கிடைக்கும், கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என்ற நம்பிக்கையில் விளை நிலங்களை வழங்கினர். இந்த நிலையில் விவசாயிகளிடமிருந்து,  பொது தேவைக்காக பெறப்பட்ட நிலத்தை 15 ஆண்டுகளுக்குள், பயன்படுத்தாத  நிலையில்,  அதனை மீண்டும் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே வழங்க வேண்டும் என்ற விதிகளை அரசு மீறிகிறது. அரசு நிலங்களை தனியாருக்கு தாரைவார்பதை ஏற்க முடியாது. தற்போது ஒரு சென்ட் நிலம் இரண்டு லட்ச ரூபாய் வரை சந்தை மதிப்பு உள்ள நிலை யில் விவசாயிகளிடமிருந்து  அடி மாட்டு  விலைக்கு கையகப்படுத்திய நிலத்தை  மீண்டும் விவசாயிகளிடமே,  ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி களை கவரைப்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.