ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து புதனன்று (மார்ச் 16) சென்னை பல்கலைக் கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய சென்னை மாவட்ட குழு உறுப்பினர் அருண் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய குழு உறுப்பினர் நிருபன் சக்கரவர்த்தி, மாவட்டத் தலைவர் மிருதுளா, செயலாளர் எல்.விக்னேஷ்வரன், இணைச் செயலாளர் சங்கரய்யா உள்ளிட்டோர் பேசினர்.