ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை கைவிடக் கோரி திருவண்ணாமலை நீதிமன்ற வளாகம் முன்பு, மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் எஸ். அபிராமன், வே. முத்தையன், எம்.ஜெயபாலன், பாசறை பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.