சென்னை, ஏப். 3 - வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை மாற்ற இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் என்று தயாநிதி மாறன் கூறினார். திமுக சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தலைமையில், மத்தியசென்னை மக்களவைத்தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் புதனன்று (ஏப். 3) துறைமுகம் பகுதியில் உள்ள 54, 57, 59 வட்டங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய தயாநிதி மாறன், தேர்தல் வந்தால் தமிழ் மீதும், தமி ழர்கள் மீதும் பாசம் வந்துவிடுகிறது. ஆனால் மழை வெள்ளத்தில் நாம் துன்பப்பட்டபோது பிரதமர் எட்டிப்பார்க்க வில்லை. ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாக கொடுத்தால் 29 காசு மட்டுமே தருகிறார்கள். ஆனால், உத்திர பிரதேசத்திற்கு இரண்டு ரூபாயும், பீகாருக்கு ஏழு ரூபாயும் தருகிறார். வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவேன் என்று பிரதமர் கூறினார். ஆனால், இருந்த வேலை வாய்ப்புகளைத்தான் பறித்தார். எங்க ளுக்கு வேலை கொடுங்கள் என்று கேட்டால் வேலை தர மறுக்கிறார்கள். ஒன்றிய அரசின் பணிகள், பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வழங்காமல் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ரயில் நிலையங்களுக்கு சென்றால், இந்தி பேசுகிற ஊழியர்கள்தான் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். அதற்கு இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். அப்போதுதான் இழந்த உரிமைகளை மீட்க முடியும்” என்றார்.